ஜெயிலில் பேஸ்புக் லைவ்: போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிய கைதிகள்

பஞ்சாப் மாநிலத்தில் சிறையிலிருந்து கைதி ஒருவர் பேஸ்புக்கில் லைவ் வீடியோ ஒளிபரப்பு செய்ததாக சிறைத்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் சிறையில் லகா சிதானா என்ற தாதா அடைக்கப்பட்டுள்ளார். இந்த வாரம் ஒருநாள் தனது பேஸ்புக் அக்கவுண்டில் 9 நிமிடங்கள் லைவ் வீடியோ ஒளிபரப்பியுள்ளார். அப்போது அவர் இருந்த சிறை அறையில் மேலும் ஆறு பேர் கைதிகளும் இருந்துள்ளனர்.

லைவ் வீடியோவில், “மக்கள் சாலையில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். பனிமூட்டத்தினால் பல வாகன விபத்துக்கள் நடப்பதால் வாகனங்கள் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருங்கள்” என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.

அப்போது, சிறையில் ரெய்டு வந்த அதிகாரி லகாவிடமிருந்து இரண்டு மொபைல்களை கைப்பற்றியுள்ளார். லகா உட்பட ஏழு பேர் மீதும் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


பஞ்சாப் சிறைகளில் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவது சகஜமாக இருப்பது மட்டுமின்றி நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களிலேயே தங்கள் எதிர் தரப்பினருக்கு மிரட்டல் விடுக்கின்றனர் என்று பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments

Popular posts from this blog

How really Cyber Expo scammed me!! Please don't fall for this..

உங்களுக்கு இது இப்போதான் தெரியுமா நடிகர் விவேக்?

இது தெரியாம லட்சுமிய கெட்டவள்னு நெனைச்சிட்டீங்களே.. படத்திலுள்ள இந்த குறியீட்டை கவனிச்சீங்களா?